search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் உணவகம்"

    • வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
    • மோசடியின் பின்னணியில் உள்ள பீகார் கும்பல் பிடிபட்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ராஜாஜி நகர், கீரைக்கார தெருவை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன் (வயது 47). இவர் பிரபல தனியார் துரித உணவகத்தின் கிளையை அரியலூரில் தொடங்குவதற்காக முடிவெடுத்தார். இதற்காக இணையதளம் ஒன்றில் பதிவு செய்தார். இதுதொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் அந்த இணையதளத்தில் பதிவு செய்தார்.

    இந்நிலையில் அவரை செல்போனில் தொடர்புகொண்ட சிலர் பல்வேறு காரணங்களை கூறி பணம் செலுத்த கூறியுள்ளனர். முன்தொகை மற்றும் தடையில்லா சான்று, பதிவுச்சான்றுக்கு என ரூ.66.20 லட்சத்தை பல்வேறு தவணைகளில் பெற்றனர்.

    ஆனால் துரித உணவகம் திறக்க எந்தவித அனுமதியும் கிடைக்கவில்லை. மேலும் அந்த இணையதளம் போலி என்பதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கொளஞ்சிநாதன் இலவச இணைய குற்ற புகார் எண் 1930-ஐ தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.

    இதனைதொடர்ந்து திருச்சி மண்டல போலீஸ் டி.ஐ.ஜி. கார்த்திகேயன் உத்தரவின்பேரில், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா மேற்பார்வையில், அரியலூர் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.வாணி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், சிவநேசன்(தொழில்நுட்பம்), போலீசார் சுரேஷ்குமார், சுதாகர், ரஞ்சித்குமார், அரவிந்தசாமி, செல்வமாணிக்கம், வசந்தி ஆகியோர் அடங்கிய 9 பேர் கொண்ட சிறப்பு குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

    இதை தொடர்ந்து முதற்கட்டமாக குற்றம்புரிய பயன்படுத்தப்பட்ட வங்கி கணக்கில் இருந்த ரூ.6 லட்சத்து 3 ஆயிரத்தை போலீசார் முடக்கினர். மேலும் குற்றவாளிகள் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் கடந்த 9-ந்தேதி பெங்களூருக்கு சென்று பிரபல தனியார் உணவகத்தின் பெயரில் மோசடியில் ஈடுபட்ட கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த முகமது இத்ரீஸ் (39), தருண் (21) ஆகியோரை கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பல்வேறு வங்கிகளில் மொத்தம் 15 வங்கி கணக்குகளை தொடங்கி, 10 சிம்கார்டுகள் உதவியுடன், பலரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் பீகாரில் உள்ள முக்கிய குற்றவாளிக்கு பணத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

    இதனைதொடர்ந்து, முகமது இத்ரீஸ், தருண் ஆகியோரிடம் இருந்து 2 செல்போன்கள், 4 சிம்கார்டுகள், 4 வங்கி கணக்கு புத்தகங்கள், 5 காசோலை புத்தகங்கள், 5 ஏ.டி.எம். கார்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே இந்த கும்பல் தமிழகம் முழுவதும் பல்வேறு மோசடியில் ஈடுபட்டிருந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    செல்போனில் ஓ.டி.பி. பெற்று மோசடி, ஆன்லைன் லோன் தருவதாக மோசடி, செல்போன் டவர் அமைக்க இருப்பதாக கூறி மோசடி என பல்வேறு நூதனை மோசடிகளை ஆன்லைன் மூலமாக அரங்கேற்றி உள்ளனர். இது தொடர்பாக தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த மோசடியின் பின்னணியில் உள்ள பீகார் கும்பல் பிடிபட்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது. இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் சிலர் பீகர் செல்ல உள்ளனர். பீகார் போலீசார் உதவியுடன் நூதன மோசடி கும்பலை கூண்டோடு பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

    • தொண்டையில் ஏதோ நெருடியதை கண்டு அதனை கஷ்டப்பட்டு எடுத்து பார்த்த போது, இரும்பு கம்பி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • பாதுகாப்பு அலுவலர் பழனிச்சாமி, உணவகத்திலுள்ள சமையல் அறை, பார்சல் செய்யும் இடம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்து, குழிப்பனியார மாவை கீழே ஊற்றும்படி உத்தரவிட்டார்,

    அரியலூர்:

    அரியலூர் ஜெ.ஜெ.நகரில் வசித்து வருபவர் ராஜலிங்கம். எருத்துக்காரன் பட்டி ஊராட்சி மன்ற உறுப்பினரான இவர், திருச்சி சாலையிலுள்ள தனியார் ஹோட்டலில் குழிப்பனியாரம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது தொண்டையில் ஏதோ நெருடியதை கண்டு அதனை கஷ்டப்பட்டு எடுத்து பார்த்த போது, இரும்பு கம்பி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதையடுத்து அவர், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்துக்கு வந்த உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிச்சாமி, உணவகத்திலுள்ள சமையல் அறை, பார்சல் செய்யும் இடம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்து, குழிப்பனியார மாவை கீழே ஊற்றும்படி உத்தரவிட்டு, உணவகம் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    • பொதுவாகவே அம்மை நோயை குணமாக்கும் தன்மை அயிரை மீனுக்கு உண்டு என்பதால் உணவகத்தினர் அதற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.
    • தற்போது உள்ள விலைவாசி உயர்வில் கிடைக்கும் மீன்களை விற்பனை செய்துவிட்டு போகாமல் வாடிக்கையாளர்களின் திருப்தி என்பதையே நோக்கமாக கொண்டு உணவக உரிமையாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

    புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் எதிரே தனியாருக்கு சொந்தமான அசைவ உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வழங்கப்படும் உணவு வகைகளின் சுவைக்கு கட்டுப்பட்ட பலர் நிரந்தர வாடிக்கையாளர்களாக இருந்து வருகிறார்கள். அவர்களை திருப்திப்படுத்தவும், கூடுதல் சுவை தரவும் இங்கு சமைக்கப்படும் அயிரை மீன் குஞ்சுகளுக்கு தேங்காய் பால் கொடுக்கின்றனர்.

    கூடுதல் வேலை, கூடுதல் செலவு என்றாலும் வாடிக்கையாளர்களின் திருப்தியே தங்களுக்கு முக்கியம் என்கிறார்கள் அதன் உரிமையாளர்கள். பசியோடு வருபவர்கள் ருசியோடு சாப்பிடும் வகையில் பல்வேறு உணவு அயிட்டங்களை வழங்கி வருகின்றனர்.

    இருப்பதிலேயே கடல் வாழ் உயிரினங்களை உண்பதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில் குளங்களில் பிடிக்கப்படும் அயிரை மீன் குஞ்சுகளை வாங்கி அவற்றிற்கு தேங்காய் பால் கொடுத்து ஊற வைத்து அந்த மீன்கள் நன்றாக குடித்தபின் அவற்றை பக்குவமாக சமைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர்.

    பொதுவாகவே அம்மை நோயை குணமாக்கும் தன்மை இந்த அயிரை மீனுக்கு உண்டு என்பதால் உணவகத்தினர் அதற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.

    இதை சாப்பிடுவதற்காகவே தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர். மாதத்தில் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே இந்த மீன்கள் கிடைக்கின்றன. தற்போது உள்ள விலைவாசி உயர்வில் கிடைக்கும் மீன்களை விற்பனை செய்துவிட்டு போகாமல் வாடிக்கையாளர்களின் திருப்தி என்பதையே நோக்கமாக கொண்டு உணவக உரிமையாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

    மேலும் மீன் வகைகளில் வஞ்சிரம், சீலா, காரை, மூக்குமீன் என பலவகைகளும் இங்கு கிடைக்கிறது. புதுக்கோட்டைக்கு பெயர் போன முட்டை மாஸ் வகைகளும் வழங்கப்படுகிறது. பொடி மாஸ், பெருவெட்டு மாஸ், லாப்பா, கோல்டன் மாஸ் என பல வகை உணவுகளை செய்து கொடுக்கிறார்கள்.

    ×